திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 230

முதல் தந்திரம்12. அந்தணர் ஒழுக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நூலும் சிகையும் நுவலின் பிரமமோநூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்நூலுடை அந்தணர் காண நுவலிலே.

உரை

பூணூலும் குடுமியும் அணிந்துகொண்டால் மட்டும் இறைவனை உணர்ந்த அந்தணர் ஆகிவிட மாட்டார். பூணூல் பருத்தியால் ஆனது; குடுமி தலைமுடியைச் சிரைத்துச் செய்யப்பட்டது. பூணூலுக்கோ குடுமிக்கோ ஒருவரை இறைவனை உணர்ந்த அந்தணராக மாற்றும் சக்தி இல்லை. பூணூல் வேதாந்தம் கற்றவரின் குறியீடு; குடுமி இறை ஞானம் பெற்றவரின் குறியீடு. இறைவன் அருளிய வேதாந்தங்களைத் தம் குருவின் வழி முறைப்படிக் கற்று, அவற்றின் பொருளை உணர்ந்து, இறைவனை உணர்ந்தபின் பூணூலும் குடுமியும் அணிந்தவர்களே அந்தணர் என்னும் சொல்லுக்குத் தகுதியானவர்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    பூணூலும் குடுமியும் அணிந்துகொண்டால் மட்டும் இறைவனை உணர்ந்த அந்தணர் ஆகிவிட மாட்டார்.

  • வரி 2

    பூணூல் பருத்தியால் ஆனது; குடுமி தலைமுடியைச் சிரைத்துச் செய்யப்பட்டது. பூணூலுக்கோ குடுமிக்கோ ஒருவரை இறைவனை உணர்ந்த அந்தணராக மாற்றும் சக்தி இல்லை.

  • வரி 3

    பூணூல் வேதாந்தம் கற்றவரின் குறியீடு; குடுமி இறை ஞானம் பெற்றவரின் குறியீடு.

  • வரி 4

    இறைவன் அருளிய வேதாந்தங்களைத் தம் குருவின் வழி முறைப்படிக் கற்று, அவற்றின் பொருளை உணர்ந்து, இறைவனை உணர்ந்தபின் பூணூலும் குடுமியும் அணிந்தவர்களே அந்தணர் என்னும் சொல்லுக்குத் தகுதியானவர்கள்.

திருமந்திரம் பாடல் #230

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout