திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 214

முதல் தந்திரம்11. அக்கினி காரியம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வசைஇல் விழுப்பொருள் வானும் நிலனும்திசையும் திசைபெறு தேவர் குழாமும்விசையம் பெருகிய வேத முதலாம்அசைஇல் அந்தணர் ஆகுதி வேட்கிலே.

உரை

ஒழுக்கத்திலிருந்து சிறிதும் மாறாத, வேதம் அறிந்த அந்தணர்கள் கருத்தோடும் சிரத்தையோடும் மந்திரங்கள் ஓதி நெய்யிட்டு ஹோமம் செய்தால், மாசில்லாத சுத்தமான மழை நீரைத் தரும் மேகங்களைக் கொண்ட வானமும், அது பொழிந்தால் வளம்பெறும் நிலங்களும், அப்படி வளம்பெற்ற நிலங்களில் விளைந்த விளைச்சல்களைப் பெற்று வாழும் எட்டுத் திசை நாட்டு மக்களும், அம்மக்கள் திசைக்கொருவராக வைத்து வணங்கும் தேவர்கள் கூட்டமும் ஆகிய இவையனைத்தும், தத்தம் காரியங்களைச் சிறப்பாகச் செய்ய, வேதங்களும் வேள்விகளும் முக்கியமாக இருக்கின்றன.

வரி வாரியாக

  • வரி 1

    ஒழுக்கத்திலிருந்து சிறிதும் மாறாத, வேதம் அறிந்த அந்தணர்கள் கருத்தோடும் சிரத்தையோடும் மந்திரங்கள் ஓதி நெய்யிட்டு ஹோமம் செய்தால், மாசில்லாத சுத்தமான மழை நீரைத் தரும் மேகங்களைக் கொண்ட வானமும்,

  • வரி 2

    அது பொழிந்தால் வளம்பெறும் நிலங்களும், அப்படி வளம்பெற்ற நிலங்களில் விளைந்த விளைச்சல்களைப் பெற்று வாழும் எட்டுத் திசை நாட்டு மக்களும்,

  • வரி 3

    அம்மக்கள் திசைக்கொருவராக வைத்து வணங்கும் தேவர்கள் கூட்டமும் ஆகிய இவையனைத்தும்,

  • வரி 4

    தத்தம் காரியங்களைச் சிறப்பாகச் செய்ய, வேதங்களும் வேள்விகளும் முக்கியமாக இருக்கின்றன.

திருமந்திரம் பாடல் #214

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout