திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 210

முதல் தந்திரம்10. நல்குரவு

தொடர்ந்து படிக்கread this section continuously

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர்எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்அக்குழி தூரும் அழுக்குஅற்ற போதே.

உரை

உயிர்களின் வயிறு ஒரு பொய்யான குழி போன்றது; பசி வரும்போது உணவு சாப்பிட்டு பசி தீர்ந்தது போலத் தோன்றினாலும், மீண்டும் சில மணி நேரத்திலேயே பசிக்கத் தொடங்கிவிடும். இப்படிப் பொய்யாக இருக்கும் வயிறு என்னும் குழியை நிரப்ப, உணவு எங்கே கிடைக்கும் என்று உயிர்கள் தினமும் தேடி அலைகின்றன. பொய்யான வயிற்றுப்பசியைப் போக்க உணவு தேடும் உயிர்கள், தமது பசியை எப்படித் தீர்த்துக்கொண்டாலும், எந்த வேலை செய்தாலும், எப்படிப் பொருள் சம்பாதித்தாலும், அதிலேயே மூழ்கியிராமல், இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வழிபடவும் நேரம் ஒதுக்கவேண்டும். அப்படிச் செய்தால் பிறவியோடு வந்த மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை என்னும் அழுக்குகளும் நீங்கி உள்ளம் தெளிவுபெறும்; உள்ளம் தெளிவுபெற்றவுடன் பிறவிப் பசியும் அப்போதே தீர்ந்து, இனி பிறவியே இல்லாத மோட்ச நிலை கிட்டிவிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்களின் வயிறு ஒரு பொய்யான குழி போன்றது; பசி வரும்போது உணவு சாப்பிட்டு பசி தீர்ந்தது போலத் தோன்றினாலும், மீண்டும் சில மணி நேரத்திலேயே பசிக்கத் தொடங்கிவிடும்.

  • வரி 2

    இப்படிப் பொய்யாக இருக்கும் வயிறு என்னும் குழியை நிரப்ப, உணவு எங்கே கிடைக்கும் என்று உயிர்கள் தினமும் தேடி அலைகின்றன.

  • வரி 3

    பொய்யான வயிற்றுப்பசியைப் போக்க உணவு தேடும் உயிர்கள், தமது பசியை எப்படித் தீர்த்துக்கொண்டாலும், எந்த வேலை செய்தாலும், எப்படிப் பொருள் சம்பாதித்தாலும், அதிலேயே மூழ்கியிராமல், இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வழிபடவும் நேரம் ஒதுக்கவேண்டும்.

  • வரி 4

    அப்படிச் செய்தால் பிறவியோடு வந்த மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை என்னும் அழுக்குகளும் நீங்கி உள்ளம் தெளிவுபெறும்; உள்ளம் தெளிவுபெற்றவுடன் பிறவிப் பசியும் அப்போதே தீர்ந்து, இனி பிறவியே இல்லாத மோட்ச நிலை கிட்டிவிடும்.

திருமந்திரம் பாடல் #210

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout