தொடர்ந்து படிக்கread this section continuously
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலேசோம்பர் கிடப்பது சுத்த வெளியிலேசோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்சோம்பர் கண்டாரச் சுருதிக்கண் தூக்கமே.
உரைmeaning
சித்தர்கள் இறைவனின் திருநாமத்தை மட்டும் மனதிற்குள் ஜெபித்துக்கொண்டே இருப்பது, எந்தவிதமான மலங்களும் வினைகளும் இல்லாத சுத்தமான பரவெளியில்தான். அவர்கள் தம் ஜெபத்தின் பலனால் இறைவனிடமிருந்து பெற்ற பேரின்பத்தில் மூழ்கி செயலற்றுக் கிடப்பதும் அதே சுத்தமான பரவெளியில்தான். அவ்வாறு பேரின்பம் கண்ட நிலையில், அவர்கள் மனதிற்குள் ஜெபித்து வந்த இறைவனின் திருநாமமும் மறைந்து, அத்திருநாமத்தில் லயித்து, இறைவனின் திருவடிகளில் கிடைக்கும் பேரின்பத்தில் எண்ணங்களும் இல்லாமல் உணர்வுகளும் இல்லாமல் தூங்குபவர்கள் போன்ற சமாதி நிலையிலேயே அவர்கள் இருப்பார்கள்.
That the Siddhars remain silently repeating within their minds only the holy name of God, this too happens in the pure vast expanse, free of every impurity and karma. That they lie immersed and inactive in the supreme bliss they receive from God as the fruit of their repetition, this too happens in that same pure vast expanse. Having reached that state of supreme bliss, even the holy name they had been repeating within their minds fades away, dissolved in that very name, and they remain in a state of samadhi, like sleep, without thoughts and without feelings, in the bliss found at God's holy feet.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சித்தர்கள் இறைவனின் திருநாமத்தை மட்டும் மனதிற்குள் ஜெபித்துக்கொண்டே இருப்பது, மலங்களும் வினைகளும் இல்லாத சுத்தமான பரவெளியில்தான்.
That the Siddhars remain silently repeating within their minds only the holy name of God happens in the pure vast expanse, free of every impurity and karma.
- வரி 2Line 2
அவர்கள் தம் ஜெபத்தின் பலனால் பெற்ற பேரின்பத்தில் மூழ்கி செயலற்றுக் கிடப்பதும் அதே சுத்தமான பரவெளியில்தான்.
That they lie immersed and inactive in the supreme bliss they receive as the fruit of their repetition happens in that same pure vast expanse.
- வரி 3Line 3
அவ்வாறு பேரின்பம் கண்ட நிலையில், அவர்கள் ஜெபித்து வந்த இறைவனின் திருநாமமும் மறைந்து அத்திருநாமத்தில் லயித்துவிடும்.
Having reached that state of supreme bliss, even the holy name they had been repeating fades away, dissolved in that very name.
- வரி 4Line 4
இறைவனின் திருவடிகளில் கிடைக்கும் பேரின்பத்தில் எண்ணங்களும் இல்லாமல் உணர்வுகளும் இல்லாமல் தூங்குபவர்கள் போன்ற சமாதி நிலையிலேயே அவர்கள் இருப்பார்கள்.
They remain in a state of samadhi, like sleep, without thoughts and without feelings, in the bliss found at God's holy feet.
திருமந்திரம் பாடல் #128





