தொடர்ந்து படிக்கread this section continuously
இருந்தார் சிவமாகி எங்குந்தா மாகிஇருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கிஇருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்துஇருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே.
உரைmeaning
சித்தர்கள் தாமே சிவம் என்பதை உணர்ந்து, சிவம் போலவே அனைத்துமே தாம்தான் என்ற நிலையில் இருப்பார்கள். சிவம் செய்யும் ஐந்துவித தொழில்களையும் ரசித்தபடியே இருப்பார்கள். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலத்திலும் நடக்கும் நிகழ்வுகளின் தன்மைகளை உணர்ந்திருப்பார்கள். தமக்கென செய்யும் செயலும் பேச்சும் எதுவும் இல்லாமல் சிவத்தோடு ஒன்றியே இருப்பார்கள் சித்தர்கள்.
Siddhars realise that they themselves are Sivam, and remain in the state where everything, like Sivam, is themselves. They remain relishing the five kinds of acts that Sivam performs. They perceive the nature of the events that unfold in all three times, past, present and future. And, having no action or speech of their own, they remain merged as one with Sivam. These are the Siddhars.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சித்தர்கள் தாமே சிவம் என்பதை உணர்ந்து, சிவம் போலவே அனைத்துமே தாம்தான் என்ற நிலையில் இருப்பார்கள்.
Siddhars realise that they themselves are Sivam, and remain in the state where everything, like Sivam, is themselves.
- வரி 2Line 2
சிவம் செய்யும் ஐந்துவித தொழில்களையும் ரசித்தபடியே இருப்பார்கள்.
They remain relishing the five kinds of acts that Sivam performs.
- வரி 3Line 3
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலத்திலும் நடக்கும் நிகழ்வுகளின் தன்மைகளை உணர்ந்திருப்பார்கள்.
They perceive the nature of the events that unfold in all three times, past, present and future.
- வரி 4Line 4
தமக்கென செய்யும் செயலும் பேச்சும் எதுவும் இல்லாமல் சிவத்தோடு ஒன்றியே இருப்பார்கள் சித்தர்கள்.
And, having no action or speech of their own, they remain merged as one with Sivam. These are the Siddhars.
திருமந்திரம் பாடல் #127





