Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 988

பொருட்பால்ஒழிபியல்99. சான்றாண்மை

இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.

inmai oruvaR kiLivanRu sAlpennumtiNmaiyuN TAkap peRin

Meaning in English

To soul with perfect virtue's strength endued, Brings no disgrace the lack of every earthly good

பொருள் / உரை

மு.வரதராசன்

சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

பரிமேலழகர்

சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது. (தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com