Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 965

பொருட்பால்ஒழிபியல்97. மானம்

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகுன்றி அனைய செயின்.

kunRin anaiyArum kunRuvar kunRuvakunRi anaiya seyin

Meaning in English

If meanness, slight as 'abrus' grain, by men be wrought, Though like a hill their high estate, they sink to nought

பொருள் / உரை

மு.வரதராசன்

மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.

பரிமேலழகர்

குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர். ('குன்றியனையவும்' என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.)

சாலமன் பாப்பையா

நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com