முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல்.
muRaikOTi mannavan seyyin uRaikOTiollAtu vAnam peyal
Meaning in English
Where king from right deflecting, makes unrighteous gain, The seasons change, the clouds pour down no rain
பொருள் / உரை
மு.வரதராசன்
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
பரிமேலழகர்
மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின், உறைகோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது. (இரண்டிடத்தும் 'கோட' என்பன திரிந்து நின்றன. உறைகோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்குஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)
சாலமன் பாப்பையா
ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.




