Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 553

பொருட்பால்அரசியல்56. கொடுங்கோன்மை

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும்.

nAToRum nATi muRaiseyyA mannavannAToRum nATu keTum

Meaning in English

Who makes no daily search for wrongs, nor justly rules, that king Doth day by day his realm to ruin bring

பொருள் / உரை

மு.வரதராசன்

நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

பரிமேலழகர்

நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் - தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறைமையைச் செய்யாத அரசன், நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடு இழக்கும். (அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது.இழத்தல்: பயன் எய்தாமை. 'மன்னவன் நாடு நாள்தொறும்கெடும்' என்று உரைப்பாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com