Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 427

பொருட்பால்அரசியல்43. அறிவுடைமை

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்.

aRivuTaiyAr Ava taRivAr aRivilAraஃtaRi kallA tavar

Meaning in English

The wise discern, the foolish fail to see, And minds prepare for things about to be

பொருள் / உரை

மு.வரதராசன்

அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

பரிமேலழகர்

அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையராவர் வரக் கடவதனை முன் அறிய வல்லார் , அறிவிலார் அஃது அறிகல்லாதவர் - அறிவிலராவார் அதனைமுன் அறியமாட்டாதார். (முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது: வந்தால் அறிதல். இனி, 'ஆவது அறிவார் என்பதற்குத் தமக்கு நன்மையறிவார்' என்று உரைப்பாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com