Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 40

அறத்துப்பால்பாயிரவியல்4. அறன்வலியுறுத்தல்

செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி.

seyaRpAla tOrum aRanE oruvaRkuuyaRpAla tOrum pazhi

Meaning in English

'Virtue' sums the things that should be done; 'Vice' sums the things that man should shun

பொருள் / உரை

மு.வரதராசன்

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

பரிமேலழகர்

ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே. ( 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.)

சாலமன் பாப்பையா

ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com