Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 283

அறத்துப்பால்துறவறவியல்29. கள்ளாமை

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்துஆவது போலக் கெடும்.

kaLavinA lAkiya Akkam aLaviRantAvatu pOlak keTum

Meaning in English

The gain that comes by fraud, although it seems to grow With limitless increase, to ruin swift shall go

பொருள் / உரை

மு.வரதராசன்

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

பரிமேலழகர்

களவினால் ஆகிய ஆக்கம் - களவினால் உளதாகிய பொருள், ஆவது போல அளவிறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும். (ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர்.

சாலமன் பாப்பையா

திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com