Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 152

அறத்துப்பால்இல்லறவியல்16. பொறையுடைமை

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.

poRutta liRappinai yenRum atanaimaRatta lataninum nanRu

Meaning in English

Forgiving trespasses is good always; Forgetting them hath even higher praise;

பொருள் / உரை

மு.வரதராசன்

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

பரிமேலழகர்

என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல் அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின்அப்பொறையினும் நன்று. ('மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும் பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை 'அதனினும் நன்று' என்றார்)

சாலமன் பாப்பையா

தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com