Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 124

அறத்துப்பால்இல்லறவியல்13. அடக்கமுடைமை

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்மலையினும் மாணப் பெரிது.

nilaiyin tiriyA taTangkiyAn tORRammalaiyinum mANap peritu

Meaning in English

In his station, all unswerving, if man self subdue, Greater he than mountain proudly rising to the view

பொருள் / உரை

மு.வரதராசன்

தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

பரிமேலழகர்

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப்பெரிது - மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது. (திரியாது அடங்குதல் - பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.)

சாலமன் பாப்பையா

தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com