Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1233

இன்பத்துப்பால்கற்பியல்124. உறுப்புநலனழிதல்

தணந்தமை சால அறிவிப்ப போலும்மணந்தநாள் வீங்கிய தோள்.

taNantamai sAla aRivippa pOlummaNantanAL vIngkiya tOL

Meaning in English

These withered arms, desertion's pangs abundantly display, That swelled with joy on that glad nuptial day

பொருள் / உரை

மு.வரதராசன்

கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.

பரிமேலழகர்

(இதுவும் அது.) மணந்த நாள் வீங்கிய தோள் - காதலர் மணந்த ஞான்று, இன்ப மிகுதியால் பூரித்த நின் தோள்கள்; தணந்தமை சால அறிவிப்ப போலும் - இன்று அவர் பிரிந்தமையை விளங்க உணர்த்துவது போல் மெலியா நின்றன, இது தகாது. ('அன்றும் அவ்வாறு பூரித்து இன்றும் இவ்வாறு மெலிந்தால், இரண்டும் கண்டவர் கடிதின் அறிந்து அவரைத் தகவின்மை கூறுவர்' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com