Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1202

இன்பத்துப்பால்கற்பியல்121. நினைந்தவர்புலம்பல்

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்நினைப்ப வருவதொன்று ஏல்.

enaitton RinitEkAN kAmantAm vIzhvArninaippa varuvaton Ril

Meaning in English

How great is love! Behold its sweetness past belief! Think on the lover, and the spirit knows no grief

பொருள் / உரை

மு.வரதராசன்

தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல் - தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைவார்க்கு அப்பிரிவின் வருவதோர் துன்பம் இல்லையாம்; காமம் எனைத்து இனிது ஒன்றே காண் - அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண். (புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், 'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com