Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 108

அறத்துப்பால்இல்லறவியல்11. செய்ந்நன்றி அறிதல்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.

nanRi maRappatu nanRanRu nanRallatuanRE maRappatu nanRu

Meaning in English

'Tis never good to let the thought of good things done thee pass away; Of things not good, 'tis good to rid thy memory that very day

பொருள் / உரை

மு.வரதராசன்

ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.

பரிமேலழகர்

நன்றி மறப்பது நன்று அன்று -ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று - அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன். (இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com