திருப்புகழ் · 473செம் கலச (சிதம்பரம்)

semkalasa

தந்ததன ...... தனதான
தந்ததன ...... தனதான
செங்கலச ...... முலையார்பால்
சிந்தைபல ...... தடுமாறி
அங்கமிக ...... மெலியாதே
அன்புருக ...... அருள்வாயே
செங்கைபிடி ...... கொடியோனே
செஞ்சொல்தெரி ...... புலவோனே
மங்கையுமை ...... தருசேயே
மன்றுள்வளர் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • செம் கலச முலையார்பால் சிந்தைபல தடுமாறி
    செம்புக் குடம் போன்ற மார்பகங்களை உடைய விலைமாதர் மீது மையலால் மனம் பலவாகத் தடுமாறி
  • அங்கம் மிக மெலியாதே அன்பு உருக அருள்வாயே
    என்னுடல் மிகவும் மெலிவு அடையாமல், உன் அன்பால் என் உள்ளம் உருகும்படி அருள் செய்வாயாக.
  • செம் கை பிடி கொடியோனே செம் சொல் தெரி புலவோனே
    சிவந்த கையில் பிடித்துள்ள சேவல் கொடியோனே, சிறந்த சொற்களைத் தெரிந்த புலவனே,
  • மங்கை உமை தரு சேயே மன்றுள் வளர் பெருமாளே.
    மங்கை பார்வதி ஈன்ற குழந்தையே, தில்லைப் பொன்னம்பலத்தினுள் விளங்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits