திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 196

முதல் தந்திரம்5. உயிர் நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொருதவ்விக்கொ டுஉண்மின் தலைப்பட்ட போதே.

உரை

பொய்யும் புரட்டும் பேசி அறவழிகளை அழிக்காதீர்கள். பொறாமையும் கோபமும் கொண்டு பிறரின் பொருளைப் பிடுங்கிக்கொள்ளாமல் இருங்கள். எண்ணமும் செயலும் சிறப்புடையதாக மாறி, வாழ்வு சிறந்திருக்கும்போது, உணவு உண்ணும்போது யாராவது வந்து பசிக்கிறது என்றால், ஒரு கைப்பிடி அளவாவது உணவை அவருக்கு அளித்தபின் உண்ணுங்கள். இப்படியெல்லாம் வாழ்ந்தால், உடல் அழிந்து உயிர் பிரிந்தாலும், இறைவனை அடைந்து பேரின்பம் அடையலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    பொய்யும் புரட்டும் பேசி அறவழிகளை அழிக்காதீர்கள்.

  • வரி 2

    பொறாமையும் கோபமும் கொண்டு பிறரின் பொருளைப் பிடுங்கிக்கொள்ளாமல் இருங்கள்.

  • வரி 3

    எண்ணமும் செயலும் சிறப்புடையதாக மாறி, வாழ்வு சிறந்திருக்கும்போது, உணவு உண்ணும்போது யாராவது வந்து பசிக்கிறது என்றால்,

  • வரி 4

    ஒரு கைப்பிடி அளவாவது உணவை அவருக்கு அளித்தபின் உண்ணுங்கள். இப்படியெல்லாம் வாழ்ந்தால், உடல் அழிந்து உயிர் பிரிந்தாலும், இறைவனை அடைந்து பேரின்பம் அடையலாம்.

திருமந்திரம் பாடல் #196

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout