தொடர்ந்து படிக்கread this section continuously
மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகைபீறு மதனைப் பெரிதுணர்ந் தாரில்லைகூறுங் கருமயிர் வெண்மயி ராவதும்ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.
உரைmeaning
பட்டு நூலின் சிக்கல் நீக்கி, கரை வைத்து அழகு கூட்டி, கண்ணும் கருத்துமாக நெய்த பட்டாடைகூட நாளாக நாளாக நைந்து ஒருநாள் கிழிந்துபோகும் என்பதை உணராமல், தாம் வாங்கும் பட்டாடை என்றும் இருக்கும் என்று மக்கள் எண்ணுகின்றனர். நாட்கள் கடந்துகொண்டிருப்பதையும், தமக்கு வயது கூடி கிழப்பருவம் வருவதையும், கருப்பாக இருந்த கூந்தல் வெள்ளையாக மாறுவதையும் உணர்ந்துகொள்ளாமல், சூரியன் மறைந்து தோன்றுவதற்கு ஒருநாள் ஆகிறது என்று கூறும் உயிர்கள், அதே குறிப்பால் தமக்கும் வாழ்நாள் குறைந்துகொண்டிருப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர்.
People forget that even a silken cloth, its threads first cleared of tangles, given a border, made lovely, and woven with great care and attention, wears thin day by day and one day tears; they think the silk cloth they have bought will last forever. Living beings who mark that the sun sets and rises once each day do not, by that same reckoning, realize that their own lifespan is shrinking with each such day; they fail to notice the days passing, their own age advancing and old age arriving, and their once-black hair turning white.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பட்டு நூலின் சிக்கல் நீக்கி, கரை வைத்து அழகு கூட்டி, கண்ணும் கருத்துமாக நெய்த பட்டாடைகூட,
Even a silken cloth, its threads first cleared of tangles, given a border, made lovely, and woven with great care and attention,
- வரி 2Line 2
நாளாக நாளாக நைந்து ஒருநாள் கிழிந்துபோகும் என்பதை உணராமல், தாம் வாங்கும் பட்டாடை என்றும் இருக்கும் என்று மக்கள் எண்ணுகின்றனர்.
wears thin day by day and one day tears; but people forget this, and think the silk cloth they have bought will last forever.
- வரி 3Line 3
நாட்கள் கடந்துகொண்டிருப்பதையும், தமக்கு வயது கூடி கிழப்பருவம் வருவதையும், கருப்பாக இருந்த கூந்தல் வெள்ளையாக மாறுவதையும் உணர்ந்துகொள்வதில்லை.
They fail to notice the days passing, their own age advancing and old age arriving, and their once-black hair turning white.
- வரி 4Line 4
சூரியன் மறைந்து தோன்றுவதற்கு ஒருநாள் ஆகிறது என்று கூறும் உயிர்கள், அதே குறிப்பால் தமக்கும் வாழ்நாள் குறைந்துகொண்டிருப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர்.
Living beings who mark that the sun sets and rises once each day do not, by that same reckoning, realize that their own lifespan is shrinking with each such day.
திருமந்திரம் பாடல் #192





