தொடர்ந்து படிக்கread this section continuously
முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்செப்ப மதிளுடைக் கோயில் சிதைந்தபின்ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.
உரைmeaning
மனித உடலில் தொண்ணூற்றாறு தத்துவங்கள் வாழ்கின்றன. அந்தத் தொண்ணூற்றாறு தத்துவங்களாலும் கட்டப்பட்ட மதிலாகிய உடல் சூழ்ந்த கோயிலுக்குள், ஆன்மாவாகிய உயிர் வாழ்கின்றது. எப்போது அந்தக் கோயிலாகிய உடல் பழுதடைந்து, உயிர் அதைவிட்டுப் போகிறதோ, அப்போது அதன் மதிலாக இருந்த தொண்ணூற்றாறு தத்துவங்களும் ஒன்றாக ஓடிவிடுகின்றன.
Ninety-six principles dwell in the human body. Within the temple that is the body, walled about by all ninety-six of them, dwells the soul that is the life. When that temple which is the body falls into ruin and the life leaves it, the ninety-six principles that stood as its wall all run away together.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மனித உடலில் தொண்ணூற்றாறு தத்துவங்கள் வாழ்கின்றன.
Ninety-six principles dwell in the human body.
- வரி 2Line 2
அந்தத் தொண்ணூற்றாறு தத்துவங்களாலும் கட்டப்பட்ட மதிலாகிய உடல் சூழ்ந்த கோயிலுக்குள், ஆன்மாவாகிய உயிர் வாழ்கின்றது.
Within the temple that is the body, walled about by all ninety-six of them, dwells the soul that is the life.
- வரி 3Line 3
எப்போது அந்தக் கோயிலாகிய உடல் பழுதடைந்து உயிர் அதைவிட்டுப் போகிறதோ,
When that temple which is the body falls into ruin and the life leaves it,
- வரி 4Line 4
அப்போது அதன் மதிலாக இருந்த தொண்ணூற்றாறு தத்துவங்களும் ஒன்றாக ஓடிவிடுகின்றன.
then the ninety-six principles that stood as its wall all run away together.
திருமந்திரம் பாடல் #154





