தானத் தனதான தானத் ...... தனதான
நீதத் துவமாகி .. நேமத் ...... துணையாகிப்
பூதத் தயவான .. போதைத் ...... தருவாயே
நாதத் தொனியோனே .. ஞானக் ...... கடலோனே
கோதற் றமுதானே .. கூடற் ...... பெருமாளே.
- நீதத் துவமாகி
நீதித்தன்மை கொண்டதாய், - நேமத் துணையாகி
சீரிய ஒழுக்கத்தில் ஒழுகுவதற்குத் துணை செய்வதாய், - பூதத் தயவான
உயிர்வர்க்கங்களின் மேல் கருணைசெய்வதாய் விளங்கும் - போதைத் தருவாயே
நல்லறிவைத் தந்தருள்வாயாக. - நாதத் தொனியோனே
ஒலியும் ஓசையுமாய் விளங்குபவனே, - ஞானக் கடலோனே
ஞான சமுத்திரமே, - கோதற்ற அமுதானே
குற்றமில்லாத அமிர்தத்தைப் போன்றவனே, - கூடற் பெருமாளே.
நான்மாடக்கூடல் என்னும் மதுரைப்பதியில் உள்ள பெருமாளே.