தானாத் தனதான தானாத் ...... தனதான
தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே
பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே.
- தீராப் பிணிதீர
முடிவே இல்லாத பிறவி நோய் முடிவு பெறவும், - சீவ ஆத்தும ஞான
ஜீவனாகிய ஆத்மாவைப் பற்றிய இந்தச் சிற்றுயிர் ஞான நிலை பெறுவதற்கும், - ஊராட்சியதான ஓர்வாக்கு அருள்வாயே
உலகெல்லாம் ஆட்சி செய்யக் கூடிய ஒப்பற்ற உபதேச மொழியொன்றை நீ எனக்கு ஓதி அருள்வாயாக. - பாரோர்க் கிறைசேயே
உலகத்துக்கெல்லாம் தலைவராகிய சிவபிரானின் குமாரனே, - பாலாக் கிரிராசே
இளையோனே, குன்றுகளுக்கெல்லாம் அரசனான குமரனே, - பேராற் பெரியோனே
புகழால் மிகவும் பெரியவனே, - பேரூர்ப் பெருமாளே.
பேரூர்த் தலத்தில்* எழுந்தருளியுள்ள பெருமாளே.