திருப்புகழ் 949 தீராப் பிணிதீர (பேரூர்)

தானாத் தனதான தானாத் ...... தனதான
தீராப்  பிணிதீர  சீவாத்  ......  துமஞான 
ஊராட்  சியதான  ஓர்வாக்  ......  கருள்வாயே 
பாரோர்க்  கிறைசேயே  பாலாக்  ......  கிரிராசே 
பேராற்  பெரியோனே  பேரூர்ப்  ......  பெருமாளே. 
  • தீராப் பிணிதீர
    முடிவே இல்லாத பிறவி நோய் முடிவு பெறவும்,
  • சீவ ஆத்தும ஞான
    ஜீவனாகிய ஆத்மாவைப் பற்றிய இந்தச் சிற்றுயிர் ஞான நிலை பெறுவதற்கும்,
  • ஊராட்சியதான ஓர்வாக்கு அருள்வாயே
    உலகெல்லாம் ஆட்சி செய்யக் கூடிய ஒப்பற்ற உபதேச மொழியொன்றை நீ எனக்கு ஓதி அருள்வாயாக.
  • பாரோர்க் கிறைசேயே
    உலகத்துக்கெல்லாம் தலைவராகிய சிவபிரானின் குமாரனே,
  • பாலாக் கிரிராசே
    இளையோனே, குன்றுகளுக்கெல்லாம் அரசனான குமரனே,
  • பேராற் பெரியோனே
    புகழால் மிகவும் பெரியவனே,
  • பேரூர்ப் பெருமாளே.
    பேரூர்த் தலத்தில்* எழுந்தருளியுள்ள பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com