தனதனதனத் ...... தனதான
தனதனதனத் ...... தனதான
பகலிரவினிற் ...... றடுமாறா
பதிகுருவெனத் ...... தெளிபோத
ரகசியமுரைத் ...... தநுபூதி
ரதநிலைதனைத் ...... தருவாயே
இகபரமதற் ...... கிறையோனே
இயலிசையின்முத் ...... தமிழோனே
சகசிரகிரிப் ...... பதிவேளே
சரவணபவப் ...... பெருமாளே.
- பகலிரவினில் தடுமாறா
நினைவு, மறப்பு என்ற நிலைகளிலே தடுமாறாது, - பதிகுருவெனத் தெளிபோத
முருகனே குருநாதன் என்று தெளிகின்ற ஞானத்தின் - ரகசியமுரைத்து
பரம ரகசியத்தை அடியேனுக்கு உபதேசித்து, - அநுபூதி ரதநிலைதனைத் தருவாயே
ஒன்றுபடும் ரசமான பேரின்ப நிலையினைத் தந்தருள்வாயாக. - இகபரமதற்கு இறையோனே
இம்மைக்கும் மறுமைக்கும் தலைவனாக விளங்குபவனே, - இயலிசையின் முத்தமிழோனே
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியவனே, - சகசிரகிரிப்* பதிவேளே
இவ்வுலகில் மேலான திருச்சிரா மலையின் செவ்வேளே, - சரவணபவப் பெருமாளே.
சரவணபவப் பரம்பொருளே.



