தத்தத் தனதான தத்தத் ...... தனதான
தத்தத் தனதான தத்தத் ...... தனதானா
அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசை
பற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ...... தொளைசீலா
கற்றுற் றுணர்போதா கச்சிப் ...... பெருமாளே.
- அற்றைக்கு இரைதேடி
அன்றாடத்துக்கு வேண்டிய உணவைத் தேடி, - அத்தத்திலும் ஆசை
பொருள் மீதும் ஆசையினை - பற்றித் தவியாத பற்றை
வைத்துக்கொண்டு தவிக்காத உறுதிப்பாடை - பெறுவேனோ
யான் பெறுதற்கு இயலுமோ? - வெற்றிக் கதிர்வேலா
வெற்றியே விளங்கும் ஜோதி வேலவனே, - வெற்பைத் தொளைசீலா
கிரெளஞ்சமலையைத் தொளைத்த பரிசுத்தனே, - கற்றுற் றுணர்போதா
கற்றுத் தியானித்து உணரத்தக்க ஞானஸ்வரூபனே, - கச்சிப் பெருமாளே.
காஞ்சிபுரத்தில் அமர்ந்த பெருமாளே.



