திருப்புகழ் · 1333கோலக்காதிற் (திருக்கானப்பேர்)

kOlakkAthiR

தானத்தானத் ...... தனதானா
தானத்தானத் ...... தனதானா
கோலக்காதிற் ...... குழையாலே
கோதிச்சேர்மைக் ...... குழலாலே
ஞாலத்தாரைத் ...... துயரேசெய்
*நாரிக்காசைப் ...... படலாமோ
மேலைத்தேவர்க் ...... கரியோனே
வீரச்சேவற் ...... கொடியோனே
காலப்பாசத் ...... துயர்தீராய்
கானப்பேரிற் ...... பெருமாளே.
குறிப்பு:
*நாரி=பெண்.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits