திருப்புகழ் 1333 கோலக்காதிற் (திருக்கானப்பேர்)

தானத்தானத் ...... தனதானா
தானத்தானத் ...... தனதானா
கோலக்காதிற்  ......  குழையாலே 
கோதிச்சேர்மைக்  ......  குழலாலே 
ஞாலத்தாரைத்  ......  துயரேசெய் 
*நாரிக்காசைப்  ......  படலாமோ 
மேலைத்தேவர்க்  ......  கரியோனே 
வீரச்சேவற்  ......  கொடியோனே 
காலப்பாசத்  ......  துயர்தீராய் 
கானப்பேரிற்  ......  பெருமாளே. 
குறிப்பு: 
*நாரி=பெண். 

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com