தானதனத் ...... தனதான
தேனியல்சொற் ...... கணிமாதர்
சேவைதனைக் ...... கருதாதே
யானெனதற் ...... றிடுபோதம்
யானறிதற் ...... கருள்வாயே
வானவருக் ...... கரசான
வாசவனுக் ...... கினியோனே
ஆனைமுகற் ...... கிளையோனே
ஆறுமுகப் ...... பெருமாளே.
- தேன் இயல் சொற்கு அணி மாதர் சேவை தனைக் கருதாதே
தேனின் இனிமைத் தன்மையைக் கொண்ட, சொல்லழகு உடைய பெண்களுக்குப் பணிவிடை செய்வதை நான் சிந்தியாது, - யான் எனது அற்றிடு போதம் யான் அறிதற்கு அருள்வாயே
யான் எனது (அகங்காரம், மமகாரம்) என்னும் இரண்டு பாசங்களும் நீங்குகின்ற ஞானத்தை நான் உணர்ந்து அறிந்துகொள்ள அருள்வாயாக. - வானவருக்கு அரசான வாசவனுக்கு இனியோனே
விண்ணோர்களுக்கு அரசனான இந்திரனுக்கு இனிய நண்பனே, - ஆனை முகற்கு இளையோனே
யானை முகமுடைய கணபதிக்குத் தம்பியே, - ஆறு முகப் பெருமாளே.
ஆறு முகமுடைய பெருமாளே.