பதிவு
சாந்தானந்த சுவாமிகள் 1921ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் நாள் மதுரையில் பிறந்தார். சேலம் அருகே உடையப்பட்டியில் ஸ்கந்தாசிரமத்தை 1968ஆம் ஆண்டு நிறுவினார்; அதன் மகா கும்பாபிஷேகம் 1971 பிப்ரவரி 8ஆம் நாள் நடைபெற்றது. முருகப்பெருமான் மீது 447 அடிகள் கொண்ட ‘கந்த குரு கவசம்’ பாடலை இயற்றினார். 2002ஆம் ஆண்டு மே 27ஆம் நாள் சேலத்தில் இயற்கை எய்தினார்.



