திருப்புகழ் 943 இறவாமற் பிறவாமல் (அவிநாசி)

தனதானத் தனதான தனதானத் ...... தனதான
இறவாமற்  பிறவாமல்  எனையாள்சற்  ......  குருவாகிப் 
பிறவாகித்  திரமான  பெருவாழ்வைத்  ......  தருவாயே 
குறமாதைப்  புணர்வோனே  குகனேசொற்  ......  குமரேசா 
அறநாலைப்  புகல்வோனே  அவிநாசிப்  ......  பெருமாளே. 
  • இறவாமற் பிறவாமல்
    இறவாத வரம் தந்தும், மீண்டும் பிறவாத வரம் தந்தும்,
  • எனையாள்சற்குருவாகி
    என்னை ஆண்டருளும் நல்ல குருவாகியும்,
  • பிறவாகி
    மற்ற எல்லாத் துணைகள் ஆகியும்,
  • திரமான பெருவாழ்வைத் தருவாயே
    நிலையான (ஸ்திரமான) முக்தியாம் மோக்ஷவீட்டை அருள்வாயாக.
  • குறமாதைப் புணர்வோனே
    குறப்பெண் வள்ளியை மணந்தவனே,
  • குகனேசொற் குமரேசா
    குகனே, புகழ் வாய்ந்த குமரேசனே,
  • அறநாலைப் புகல்வோனே
    அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் உபதேசிப்பவனே,
  • அவிநாசிப் பெருமாளே.
    அவிநாசியில்* வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com