திருப்புகழ் 923 மதியால் வித்தகன் (கருவூர்)

தனதானத் தனதான தனதானத் ...... தனதான
மதியால்வித்  தகனாகி  மனதாலுத்  ......  தமனாகிப் 
பதிவாகிச்  சிவஞான  பரயோகத்  ......  தருள்வாயே 
நிதியேநித்  தியமேயென்  நினைவேநற்  ......  பொருளாயோய் 
கதியேசொற்  பரவேளே  கருவூரிற்  ......  பெருமாளே. 
  • மதியால் வித்தகனாகி
    என் புத்தியைக் கொண்டு நான் ஒரு பேரறிவாளனாகி,
  • மனதால் உத்தமனாகி
    என் மனம் நன்னெறியின் செல்ல அதனால் நான் ஒரு உத்தம மனிதனாகி,
  • பதிவாகிச் சிவஞான
    சிவ ஞானத்தில் என் சிந்தை ஊன்றுவதாகி,
  • பரயோகத்து அருள்வாயே
    மேலான யோக வழியை நான் பற்றும்படியாக அருள் புரிவாயாக.
  • நிதியே நித்தியமே யென் நினைவே
    என் செல்வமே, அழிவில்லாப் பொருளே, எனது தியானப் பொருளே,
  • நற் பொருளாயோய்
    சிறந்த பேரின்பப் பொருளானவனே,
  • கதியே சொற் பரவேளே
    எனக்குப் புகலிடமே, எல்லாராலும் புகழப்பெறும் மேலான செவ்வேளே,
  • கருவூரிற் பெருமாளே.
    கருவூர்த்* தலத்தில் எழுந்தருளிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com