தனதானத் தனதான தனதானத் ...... தனதான
மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.
- மதியால் வித்தகனாகி
என் புத்தியைக் கொண்டு நான் ஒரு பேரறிவாளனாகி, - மனதால் உத்தமனாகி
என் மனம் நன்னெறியின் செல்ல அதனால் நான் ஒரு உத்தம மனிதனாகி, - பதிவாகிச் சிவஞான
சிவ ஞானத்தில் என் சிந்தை ஊன்றுவதாகி, - பரயோகத்து அருள்வாயே
மேலான யோக வழியை நான் பற்றும்படியாக அருள் புரிவாயாக. - நிதியே நித்தியமே யென் நினைவே
என் செல்வமே, அழிவில்லாப் பொருளே, எனது தியானப் பொருளே, - நற் பொருளாயோய்
சிறந்த பேரின்பப் பொருளானவனே, - கதியே சொற் பரவேளே
எனக்குப் புகலிடமே, எல்லாராலும் புகழப்பெறும் மேலான செவ்வேளே, - கருவூரிற் பெருமாளே.
கருவூர்த்* தலத்தில் எழுந்தருளிய பெருமாளே.