தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா
சைவமுதற் குருவாயே சமணர்களைத் ...... தெறுவோனே
பொய்யர்உளத் தணுகானே புனிதவருட் ...... புரிவாயே
கையின்மிசைக் கதிர்வேலா கடிகமழற் ...... புதநீபா
தெய்வசற் குருநாதா திருமதுரைப் ...... பெருமாளே.
- சைவ முதல் குருவாயே சமணர்களைத் தெறுவோனே
சைவ சமயத்தின் முதலான குருவாக (திருஞானசம்பந்தராக) வந்து, சமணர்களை முறியடித்தவனே, - பொய்யர் உ(ள்)ளத்து அணுகானே புனித அருள் புரிவாயே
பொய்யர்களின் மனத்தில் இருக்காதவனே, உன் திருவருளைத் தந்து அருளுவாயாக. - கையின் மிசைக் கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா
உனது திருக் கரத்தில் ஒளி வீசும் வேலை ஏந்தியவனே, நறு மணம் வீசும் அற்புதமான கடப்ப மாலையைத் தரித்தவனே, - தெய்வ சற் குரு நாதா திருமதுரைப் பெருமாளே.
இறைவனாகிய சிவ பெருமானுக்குச் சிறந்த குருவான தலைவனே, அழகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.