தனதனனத் ...... தனதான
தனதனனத் ...... தனதான
புமியதனிற் ......ப்ரபுவான
புகலியில்வித் ...... தகர்போல
அமிர்தகவித் ...... தொடைபாட
அடிமைதனக் ...... கருள்வாயே
சமரிலெதிர்த் ...... தசுர்மாளத்
தனியயில்விட் ...... டருள்வோனே
நமசிவயப் ...... பொருளானே
ரசதகிரிப் ...... பெருமாளே.
- புமியதனிற் ப்ரபுவான
இந்தப் பூமண்டலத்தின் தனிப் பெரும் தலைவரும், - புகலியில்* வித்தகர்போல
சீர்காழிப்பதியில் அவதரித்தவருமான திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல - அமிர்தகவித் தொடைபாட
இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத் தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு - அடிமைதனக்கு அருள்வாயே
இந்த அடிமைக்கும் திருவருள் புரிவாயாக. - சமரிலெதிர்த்த சுர் மாள
போரில் எதிர்த்து வந்த சூரன் மாண்டொழிய - தனியயில்விட்டு அருள்வோனே
ஒப்பற்ற வேலாயுதத்தை ஏவி அருளியவனே, - நமசிவயப் பொருளானே
நமசிவய என்ற ஐந்தெழுத்தின் தத்துவமாகியவனே, - ரசதகிரிப் பெருமாளே.
வெள்ளியங்கிரியில் (கயிலைமலை) உள்ள பெருமாளே.



