திரு தேவராய சுவாமிகள் அருளிய
கந்த சஷ்டி கவசம்

Sulamangalam Sisters
0:00
0:00
துதிப்போர்க்கு  வல்வினைபோம்;  துன்பம்போம்;  நெஞ்சில் 
பதிப்போர்க்குச்  செல்வம்  பலித்துக்    கதித்தோங்கும் 
நிஷ்டையும்கை  கூடும்,  நிமலரருள்  கந்தர் 
சஷ்டி  கவசம்  தனை. 
1
அமரரிடர்  தீர  அமரம்  புரிந்த 
குமரனடி  நெஞ்சே  குறி. 
2
சஷ்டியை  நோக்கச்  சரவண  பவனார் 
சிஷ்டருக்  குதவும்  செங்கதிர்  வேலோன் 
பாதம்  இரண்டில்  பன்மணிச்  சதங்கை 
கீதம்  பாடக்  கிண்கிணி  யாட 
மையல்  நடஞ்செய்யும்  மயில்வா  கனனார் 
கையில்வே  லால்எனைக்  காக்கவென்  றுவந்து 
3
வரவர  வேலா  யுதனார்  வருக 
வருக  வருக  மயிலோன்  வருக 
4
இந்திரன்  முதலா  எண்டிசை  போற்ற 
மந்திர  வடிவேல்  வருக  வருக! 
5
வாசவன்  மருகா!  வருக  வருக 
நேசக்  குறமகள்  நினைவோன்  வருக 
6
ஆறுமுகம்  படைத்த  ஐயா!  வருக 
நீறிடும்  வேலவன்  நித்தம்  வருக 
7
சிரகிரி  வேலவன்  சீக்கிரம்  வருக! 
சரஹண  பவனார்  சடுதியில்  வருக 
8
ரஹண  பவச  ரரரர  ரரர 
ரிஹண  பவச  ரிரிரிரி  ரிரிரி 
விணபவ  சரஹண  வீரா!  நமோநம! 
நிபவ  சரஹண  நிறநிற  நிறென 
வசர  ஹணப!  வருக!  வருக! 
அசுரர்  குடிகெடுத்த  ஐயா!  வருக! 
9
என்னை  ஆளும்  இளையோன்  கையில் 
பன்னிரண்  டாயுதம்  பாசாங்  குசமும் 
பரந்த  விழிகள்  பன்னிரண்  டிலங்க 
விரைந்தெனைக்  காக்க  வேலோன்  வருக! 
10
ஐயும்  கிலியும்  அடைவுடன்  செளவும் 
உய்யொளி  சௌவும்  உயிரையும்  கிலியும் 
கிலியுஞ்  சௌவும்  கிளரொளி  யையும் 
நிலைபெற்  றென்முன்  நித்தமும்  ஒளிரும் 
சண்முகன்  றீயும்  தனியொளி  யொவ்வும் 
குண்டலி  யாம்சிவ  குகன்தினம்  வருக! 
11
ஆறு  முகமும்  அணிமுடி  ஆறும் 
நீறிடு  நெற்றியில்  நீண்ட  புருவமும் 
பன்னிரு  கண்ணும்  பவளச்செவ்  வாயும் 
நன்னெறி  நெற்றியில்  நவமணிச்  சுட்டியும் 
12
ஈராறு  செவியில்  இலகுகுண்  டலமும் 
ஆறிரு  திண்புயத்  தழகிய  மார்பில் 
பல்பூ  ஷணமும்  பதக்கமும்  தரித்து 
நன்மணி  பூண்ட  நவரத்ன  மாலையும் 
13
முப்புரி  நூலும்  முத்தணி  மார்பும் 
செப்பழ  குடைய  திருவயி  றுந்தியும் 
துவண்ட  மருங்கில்  சுடரொளிப்  பட்டும் 
நவரத்னம்  பதித்த  நற்சீ  ராவும் 
இருதொடை  யழகும்  இணைமுழந்  தாளும் 
திருவடி  யதனில்  சிலம்பொலி  முழங்க 
14
செககண  செககண  செககண  செகண 
மொகமொக  மொகமொக  மொகமொக  மொகென 
நகநக  நகநக  நகநக  நகென 
டிகுகுண  டிகுடிகு  டிகுகுண  டிகுண 
ரரரர  ரரரர  ரரரர  ரரர 
ரிரிரிரி  ரிரிரிரி  ரிரிரிரி  ரிரிரி 
டுடுடுடு  டுடுடுடு  டுடுடுடு  டுடுடு 
டகுடகு  டிகுடிகு  டங்கு  டிங்குகு 
விந்து  விந்து  மயிலோன்  விந்து 
முந்து!  முந்து!  முருகவேள்  முந்து! 
15
என்றனை  யாளும்  ஏரகச்  செல்வ! 
மைந்தன்  வேண்டும்  வரமகிழ்ந்  துதவும் 
16
லாலா  லாலா  லாலா  வேசமும் 
லீலா  லீலா  லீலா  வினோதனென்(று) 
உன்திரு  வடியை  உறுதியென்  றெண்ணும் 
என்தலை  வைத்துன்  இணையடி  காக்க! 
17
என்னுயிர்க்  குயிராம்  இறைவன்!  காக்க! 
பன்னிரு  விழியால்  பாலனைக்  காக்க! 
18
அடியேன்  வதனம்  அழகுவேல்  காக்க! 
பொடிபுனை  நெற்றியைப்  புனிதவேல்  காக்க! 
19
கதிர்வேல்  இரண்டு  கண்ணினைக்  காக்க! 
விதிசெவி  இரண்டும்  வேலவர்!  காக்க! 
20
நாசிக  ளிரண்டும்  நல்வேல்  காக்க! 
பேசிய  வாய்தனைப்  பெருவேல்  காக்க! 
21
முப்பத்  திருபல்  முனைவேல்  காக்க! 
செப்பிய  நாவைச்  செவ்வேல்  காக்க! 
22
கன்ன  மிரண்டும்  கதிர்வேல்  காக்க! 
என்னிளங்  கழுத்தை  இனியவேல்  காக்க! 
23
மார்பை  இரத்ன  வடிவேல்  காக்க! 
சேரிள  முலைமார்  திருவேல்  காக்க! 
24
வடிவே  லிருதோள்  வளம்பெறக்  காக்க! 
பிடரிக  ளிரண்டும்  பெருவேல்  காக்க! 
25
அழகுடன்  முதுகை  அருள்வேல்  காக்க! 
பழுபதி  னாறும்  பருவேல்  காக்க! 
26
வெற்றிவேல்  வயிற்றை  விளங்கவே  காக்க! 
சிற்றிடை  யழகுறச்  செவ்வேல்  காக்க! 
27
நாணாங்  கயிற்றை  நல்வேல்  காக்க! 
ஆண்குறி  இரண்டும்  அயில்வேல்  காக்க! 
28
பிட்ட  மிரண்டும்  பெருவேல்  காக்க! 
வட்டக்  குதத்தை  வடிவேல்  காக்க! 
29
பணைத்தொடை  இரண்டும்  பருவேல்  காக்க! 
கணைக்கால்  முழந்தாள்  கதிர்வேல்  காக்க! 
30
ஐவிரல்  அடியிணை  அருள்வேல்  காக்க! 
கைக  ளிரண்டும்  கருணைவேல்  காக்க! 
31
முன்கை  யிரண்டும்  முரண்வேல்  காக்க! 
பின்கை  யிரண்டும்  பின்னவள்  இருக்க! 
32
நாவில்  சரஸ்வதி  நற்றுணை  யாக! 
நாபிக்  கமலம்  நல்வேல்  காக்க! 
33
முப்பால்  நாடியை  முனைவேல்  காக்க! 
எப்பொழு  தும்எனை  எதிர்வேல்  காக்க! 
34
அடியேன்  வசனம்  அசைவுள  நேரம் 
கடுகவே  வந்து  கனகவேல்  காக்க! 
35
வரும்பகல்  தன்னில்  வச்சிரவேல்  காக்க 
அரையிருள்  தன்னில்  அனையவேல்  காக்க 
36
ஏமத்தில்  சாமத்தில்  எதிர்வேல்  காக்க! 
தாமதம்  நீக்கிச்  சதுர்வேல்  காக்க! 
37
காக்க  காக்க  கனகவேல்  காக்க! 
நோக்க  நோக்க  நொடியில்  நோக்க! 
38
தாக்க  தாக்க  தடையறக்  தாக்க! 
பார்க்க!  பார்க்க!  பாவம்  பொடிபட 
39
பில்லி  சூனியம்  பெரும்பகை  அகல 
வல்ல  பூதம்,  வலாட்டிகப்  பேய்கள், 
அல்லற்  படுத்தும்  அடங்கா  முனியும், 
பிள்ளைகள்  தின்னும்  புழைக்கடை  முனியும், 
கொள்ளிவாய்ப்  பேய்களும்,  குறளைப்  பேய்களும், 
பெண்களைத்  தொடரும்  பிரமராட்  சதரும் 
அடியனைக்  கண்டால்  அலறிக்  கலங்கிட 
இரிசிகாட்  டேரி  இத்துன்ப  சேனையும் 
40
எல்லிலும்  இருட்டிலும்  எதிர்படும்  அண்ணரும், 
கனபூசை  கொள்ளும்  காளியோ  டனைவரும், 
விட்டாங்  காரரும்,  மிகுபல  பேய்களும், 
தண்டியக்  காரரும்,  சண்டா  ளர்களும் 
என்பெயர்  சொல்லவும்  இடிவிழுந்  தோடிட 
ஆனை  யடியினில்  அரும்பா  வைகளும் 
41
பூனை  மயிரும்,  பிள்ளைகள்  என்பும், 
நகமும்  மயிரும்  நீள்முடி  மண்டையும், 
பாவைக  ளுடனே  பலகல  சத்துடன் 
மனையிற்  புதைத்த  வஞ்சனை  தனையும், 
ஒட்டியச்  செருக்கும்,  ஒட்டியப்  பாவையும், 
காசும்  பணமும்  காவுடன்  சோறும், 
ஓதும்அஞ்  சனமும்,  ஒருவழிப்  போக்கும், 
அடியனைக்  கண்டால்  அலைந்து  குலைந்திட 
42
மாற்றான்  வஞ்சகர்  வந்து  வணங்கிட 
காலதூ  தாளெனைக்  கண்டாற்  கலங்கிட 
அஞ்சி  நடுங்கிட  அரண்டு  புரண்டிட 
வாய்விட்  டலறி  மதிகெட்  டோட 
படியினில்  முட்டப்  பாசக்  கயிற்றால் 
கட்டுடன்  அங்கம்  கதறிடக்  கட்டு! 
43
கட்டி  உருட்டு  கைகால்  முறிய 
கட்டு!  கட்டு!  கதறிடக்  கட்டு! 
44
முட்டு!  முட்டு!  முழிகள்  பிதுங்கிட 
செக்கு!  செக்கு!  செதில்செதி  லாக 
45
சொக்கு!  சொக்கு!  சூர்ப்பகைச்  சொக்கு! 
குத்து!  குத்து!  கூர்வடி  வேலால் 
46
பற்று!  பற்று!  பகலவன்  தணலெரி! 
தணலெரி!  தணலெரி!  தணலது  வாக 
47
விடு!விடு!  வேலை  வெகுண்டது  வோட 
புலியும்  நரியும்  புன்னரி  நாயும் 
எலியும்  கரடியும்  இனித்தொடர்ந்  தோட 
தேளும்  பாம்பும்  செய்யான்  பூரான் 
கடிவிட  விஷங்கள்  கடித்துய  ரங்கம் 
ஏறிய  விஷங்கள்  எளிதுடன்  இறங்க 
48
ஒளிப்புஞ்  சுளுக்கும்  ஒருதலை  நோயும் 
வாதஞ்  சயித்தியம்  வலிப்புப்  பித்தம் 
சூலைசயங்  குன்மம்  சொக்குச்  சிரங்கு 
குடைச்சல்  சிலந்தி  குடல்விப்  பிருதி 
பக்கப்  பிளவை  படர்தொடை  வாழை 
கடுவன்  படுவன்  கைத்தாள்  சிலந்தி 
பற்குத்  தரணை  பருஅரை  யாப்பும் 
எல்லாப்  பிணியும்  என்றனைக்  கண்டால் 
நில்லா  தோட  நீஎனக்  கருள்வாய் 
ஈரேழ்  உலகமும்  எனக்குற  வாக 
ஆணும்  பெண்ணும்  அனைவரும்  எனக்கா 
மண்ணா  ளரசரும்  மகிழ்ந்துற  வாகவும் 
49
உன்னைத்  துதிக்க  உன்திரு  நாமம் 
சரஹண  பவனே!  சைலொளி  பவனே! 
திரிபுர  பவனே!  திகழொளி  பவனே! 
பரிபுர  பவனே!  பவமொளி  பவனே! 
அரிதிரு  மருகா!  அமரா  வதியைக் 
காத்துத்  தேவர்கள்  கடும்சிறை  விடுத்தாய்! 
50

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com